தகவலறிந்து போலீசாரும், வருவாய் துறையினரும் வந்து சிலையை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். சுமார் 5 கிலோ எடையுள்ள இந்த உலோக சிலை ஐம்பொன்னாலான பழமையான விஷ்ணு சிலை என தெரிய வந்துள்ளது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை நாகை மண்டல தொல்லியல் ஆலோசகர் சேகர் கூறும்போது, கலைநயமிக்க திருவாச்சியுடன் கூடிய இந்த சிலை 12ம் நூற்றாண்டு பிற்கால சோழர் ஆட்சிக் காலத்தை சேர்ந்த தொன்மையான விஷ்ணு சிலை.
சிலை கிடைத்த பகுதி அருகே பழமையான பெருமாள் கோயில் உள்ளது குறிப்பிடத் தக்கது என்றார். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற வைணவத் திருத்தலமான ராஜகோபால சுவாமி கோயில் குடமுழுக்கு திருப்பணிகளுக்காக விரைவில் பாலாலயம் நடைபெற உள்ள நிலையில் அதன் உப கோயிலான கோபியர் கோபிரளயம் மகரிஷி கோயில் அருகே ஐம்பொன்னாலான பழமையான பெருமாள் சிலை கிடைத்திருப்பது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.