அதைத் தொடர்ந்து வடக்கு மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின் ‘வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம்’ வரும் 22ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் மலப்பாம்பாடி ஊராட்சியில் உள்ள அருணாச்சலம் நகரில் அமைந்துள்ள “கலைஞர் திடலில்”, தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிட நடைபெற உள்ளது. வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட திருவண்ணாமலை வடக்கு, தெற்கு, தர்மபுரி கிழக்கு, மேற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு, தெற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம் வடக்கு, தெற்கு 13 கழக மாவட்டங்களின் மாவட்டக் கழகச் செயலாளர்கள், தமது மாவட்டங்களுக்குட்பட்ட ‘வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தை கூட்டி, இப்பயிற்சி பாசறைக் கூட்டத்தின் அவசியத்தை எடுத்துரைத்து, தங்களது மாவட்டத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் அனைவரையும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.