திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ஏ.சி படுகை வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 25, 26, 27 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கும் பேருந்துகள் இயக்கபடுகிறது. நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, கோவையிலிருந்து திருவண்ணாமலைக்கு ஏ.சி. பேருந்துகள் இயக்கபடுகிறது.