அந்த வகையில், இன்று (24.07.2023) சென்னை, திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2.50 கோடி மதிப்பீட்டிலான 4 கடைகள் மீட்கப்பட்டு கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. சென்னை, திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது.
இதில் வணிக பயன்பாட்டிற்கு விடப்பட்டிருந்தது. 4 கடைகளின் வாடகைதாரர்கள் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமலும், உள்வாடகைக்கும் விட்டிருந்தார்கள். வாடகைதாரர்கள் மீது சென்னை மண்டல இணை ஆணையர் நீதிமன்றத்தில் சட்டப்பிரிவு -78 -ன் படி வழக்கு தொடரப்பட்டு, அதன் உத்தரவுப்படி சென்னை மாவட்ட உதவி ஆணையர் எம்.பாஸ்கரன் முன்னிலையில் வருவாய் மற்றும் காவல்துறை உதவியுடன் மேற்குறிப்பிட்ட 4 கடைகளும் இன்று (24.07.2023) பூட்டி சீலிடப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதினம் பெறப்பட்டது.
இதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.2.50 கோடியாகும். இந்நிகழ்வின்போது, திருக்கோயில் செயல் அலுவலர் ம.சக்திவேல், ஆய்வாளர் ராஜலெட்சுமி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.