Thursday, June 27, 2024
Home » திருவனந்தபுரம் அருகே வீடு புகுந்து தீ வைத்து பெண் எரித்துக் கொலை

திருவனந்தபுரம் அருகே வீடு புகுந்து தீ வைத்து பெண் எரித்துக் கொலை

by Arun Kumar

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே வீடு புகுந்து பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவனந்தபுரம் அருகே உள்ள சேங்கோட்டுகோணம் பகுதியைச் சேர்ந்தவர் சரிதா (46). அவருக்குத் திருமணமாகி ஒரு மகள் உள்ளார். சரிதாவுக்கும், அருகில் உள்ள பவுடிக்கோணம் பகுதியை சேர்ந்த பினு (50) என்பவருக்கும் இடையே தொடர்பு இருந்து வந்தது.

இந்தநிலையில் சமீபத்தில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் பினுவுடனான தொடர்பை சரிதா துண்டித்து உள்ளார். இந்தநிலையில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் சரிதாவின் வீட்டுக்குச் சென்ற பினு, அவரிடம் தகராறு செய்து உள்ளார். அப்போது திடீரென, தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை சரிதாவின் மீது ஊற்றி தீ வைத்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது உடல் தீ பற்றியது. அப்போது எதிர்பாராதவிதமாக பினுவின் உடலிலும் தீ பிடித்தது. உடனே அவர் அங்குள்ள கிணற்றில் குதித்தார்.

இதுகுறித்து அறிந்ததும் சேங்கோட்டுகோணம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சரிதாவையும், பினுவையும் மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உடலில் 60 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் ஏற்பட்ட 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சரிதா இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து சேங்கோட்டுகோணம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

two × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi