நான் இங்கே தான் இருக்கிறேன் ; எங்கேயும் ஓடி ஒளியவில்லை: நடிகர் மோகன்லால்

திருவனந்தபுரம்: நான் இங்கே தான் இருக்கிறேன் ; எங்கேயும் ஓடி ஒளியவில்லை என நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார். மலையாள திரையுலக பாலியல் சர்ச்சை குறித்து திருவனந்தபுரத்தில் நடிகர் மோகன்லால் பேட்டியளித்துள்ளார். அதில், அம்மா அமைப்பில் 2 முறை நான் தலைவராக இருந்தேன்; குழு கலைக்கப்பட்டாலும் சங்க செயல்பாடு தடைபடவில்லை. பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சைகளுக்கு ஒட்டு மொத்த கேரள திரையுலகமும் பதில் சொல்லும். மலையாள திரையுலகம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். தற்போதைய பிரச்னைக்கு ‘அம்மா’ அமைப்பை மட்டும் குறை சொல்வதில் நியாயமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 

Related posts

ஜம்மு-காஷ்மீர் முதல்கட்ட தேர்தலில் மாலை 5 மணி வரை 58.19 சதவீத வாக்குகள் பதிவாகின

முனைவர் வெ.நல்லதம்பி எழுதியுள்ள “ஒலியலை ஒவியர்கள்” என்ற நூலினை அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டார்!!

கேலோ இந்தியா விளையாட்டு போட்டி: செலவான ரூ.43.33 கோடியை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் வழங்கிய அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு!!