இதுகுறித்து, கல்லூரி பேராசிரியர்கள் கூறுகையில், ‘கடந்த சில ஆண்டுகளாகவே திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகளும் அதன் முடிவுகளும் சர்ச்சையாகி வருகிறது. தற்போது நடைபெறும் பருவத்தேர்வில் 2021ம் ஆண்டு வெளியான கேள்வித்தாளே மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. பழைய கேள்விகளையே மீண்டும் வழங்க எதற்காக கேள்வித்தாள் வடிவமைப்பு குழு அமைத்து அவர்களுக்கு பணம் வழங்க வேண்டும். பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு துறை கட்டுப்பாடு இல்லாமல் இயங்கி வருகிறது.
கேள்வித்தாள் வடிவமைப்பு குழுவிடம் பெறப்படும் கேள்வித்தாள்களை சரிபார்ப்பு குழு சரிவர கவனிக்கவில்லை. சரியாக கவனித்து இருந்தால் பழைய கேள்வித்தாள் ஏன் மீண்டும் வரப்போகிறது’ என்றனர். இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பாபு ஜனார்த்தனம் கூறுகையில், ‘பழைய கேள்வித்தாள் வெளியானது தொடர்பாக சம்பந்தப்பட்ட பேராசிரியரிடம் விளக்கம் கேட்டுள்ளோம். அவர் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.