திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு அருகே தண்டவாளத்தில் லாரி சிக்கிக் கொண்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேப்பம்பட்டு- திருநின்றவூர் ரயில் நிலையங்களுக்கு இடையே லாரி சென்றபோது தண்டவாளத்தில் சிக்கியது. தண்டவாளத்தில் இருந்து லாரி அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் அனைத்து ரயில்களும் காலதாமதமாகச் சென்றன.