திருவள்ளூர், கரூர், தூத்துக்குடி கலெக்டர்கள் உள்பட 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

சென்னை: தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு உதவி கலெக்டர் லட்சுமிபதி, தூத்துக்குடி கலெக்டராகவும், உலக வங்கி மற்றும் ஆசிய மேம்பாட்டு திட்ட வங்கியின் திட்ட இயக்குநர் தங்கவேல், கரூர் கலெக்டராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கரூர் கலெக்டராக இருந்த பிரபு சங்கர், திருவள்ளூர் கலெக்டராகவும், மாநில தொழில் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநராக உள்ள சுந்தரவள்ளி, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையராகவும், இந்தப் பதவியில் இருந்த வீர ராகவராவ், தொழில்நுட்ப கல்வி ஆணையராகவும், தூத்துக்குடி கலெக்டராக இருந்த செந்தில்ராஜ், தொழில் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநராகவும், திருவள்ளூர் கலெக்டராக இருந்த ஆல்பி ஜான் வர்க்கீஸ், மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநராகவும், திருப்பூர் உதவி கமிஷனர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி பிரிவின் கூடுதல் கலெக்டராகவும், வேலூர் மாநகராட்சி ஆணையர் ரத்தினசாமி, ராமநாதபுரம் ஊரக வளர்ச்சி பிரிவின் திட்ட அதிகாரியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related posts

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

மாநில ஜூனியர் தடகள போட்டி நாளை தொடக்கம்

மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்!