திருவள்ளூர்: திருவள்ளூர் மகளிர் நீதிமன்ற நடுவர் முன்பு நடிகை விஜயலட்சுமி ஆஜரானார். சீமான் மீதான புகார் கூறிய நடிகை விஜயலட்சுமியிடம் வாக்குமூலம் பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர். நேற்று விசாரணை நடத்தி விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தை போலீஸ் பதிவு செய்தது. ஆடியோ ஆதாரம், வங்கி பண பரிமாற்றம், விமான டிக்கெட் ஆதாரங்களை போலீசில் விஜயலட்சுமி அளித்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.