மேலும் அந்த வாலிபர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த இளம் பெண்ணை அழைத்து கொண்டு திருவாடானை அருகே ராமநாதபுரம் – சிவகங்கை மாவட்ட எல்லைப்பகுதியில் ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அந்த பெண்ணின் உதவியுடன், ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருவரும் தங்கினர். அப்போது இளம்பெண்ணை பலமுறை வாலிபர் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் அந்த வாலிபர் மற்றும் அவரது சக நண்பர்கள் சிலருடன் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோவும் எடுத்துள்ளனர். அதன் பிறகு அந்த பெண்ணிடம் இருந்த சுமார் 5 பவுன் நகை மற்றும் பணத்தை பறித்ததோடு, அந்த இளம்பெண்ணை 5 வாலிபர்களும் சேர்ந்து மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இளம்பெண்ணின் கணவர், தனது மனைவியைக் காணவில்லை என அவரது போட்டோவுடன் திருவாடானை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிலரிடம் விசாரித்துள்ளார். அப்போது அவரது மனைவியை அப்பகுதி வாலிபர்கள் சிலர், வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்து வருவதை அறிந்து கொண்டார்.
5 வாலிபர்களிடம் இருந்து தனது மனைவியை மீட்டு தரக்கோரி அவரது கணவர், திருவாடானை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார், இளம்பெண்ணை ஏமாற்றி கூட்டு பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்ததோடு பெண்ணின் நகை மற்றும் பணத்தை பறித்துச் சென்ற 3 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.