தமிழிசைக்கு திருஷ்டி பூசணி உடைத்து ரோட்டில் வீச்சு: ஆசிரம ஊழியர் காயம்

தெலங்கானா சென்றிருந்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று முன்தினம் புதுச்சேரி திரும்பினார். அப்போது அவர் மணக்குள விநாயகர் கோயிலை ஒட்டிய பகுதியில் (செயின்ட் லூயிஸ்வீதி) பின் வாசல் வழியாக ராஜ்நிவாஸ் செல்ல முயன்றார். கவர்னர் மாளிகை பணியாளர்கள் அவருக்கு திருஷ்டி பூசணிக்காய் சுற்றி அங்கேயே நடுரோட்டில் உடைத்துள்ளனர். அவற்றை அப்புறப்படுத்தவில்லை. அவ்வழியாக இரு சசக்கர வாகனத்தில் சென்ற ஆசிரம ஊழியர் ஒருவர் அதில் சிக்கி லேசாக காயமடைந்தார். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் கவர்னர் மாளிகை முன்பு பூசணிக்காய் சிதறி கிடந்தது குறித்து முணுமுணுத்தபடி சென்றனர்.

Related posts

ஓசி சிகரெட் தராததால் டென்சன் கடையை சூறையாடிய ‘குடிமகன்கள்’

ஆந்திர சிமெண்ட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 20 பேர் படுகாயம்

தமிழகத்துக்கு புதிதாக 5 மருத்துவக் கல்லூரிகள்