கன்னியாகுமரி: பேச்சிப்பாறை அணையிலிருந்து விநாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோதையாறு, தாமிரபரணி ஆகிய ஆறுகளின் அருகே வசிக்கும் கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.