சென்னை : ஆளுநர் ரவி பதவி விலக வேண்டும், இல்லாவிடில் குடியரசுத் தலைவர் அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆளுநர் விதித்த தடைகளை மீறி மீண்டும் அமைச்சராக பொன்முடி பதவியேற்றிருப்பது அரசமைப்பு சட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்ட அவர், சட்டரீதியாக போராடி வெற்றி கண்ட முதலமைச்சர், அமைச்சர் பொன்முடிக்கு பாராட்டுகள் என கூறியுள்ளார்.