திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 1100 வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி திறப்பு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. அதன்படி, திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியை மேம்படுத்தியுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட வாகன நிறுத்தும் பகுதி திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து 200 மீட்டர் அருகில் அமைந்துள்ளது. முந்தைய பார்க்கிங் பகுதியில் 450 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 25 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த முடியும். தற்போதுள்ள திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்தில் 1100 இரு சக்கர வாகனங்களை நிறுத்த முடியும். இந்த வாகன நிறுத்தும் வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்), நேற்று திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கூடுதல் பொது மேலாளர் சதீஷ் பிரபு (தொடர்வண்டி மற்றும் இயக்கம்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி