இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நிருபர்களிடம் கருணாகர ரெட்டி கூறியதாவது: முதல்வர் சந்திரபாபு நாயுடு பெரிய தவறு செய்துவிட்டார். தனது அரசியலுக்காக ஏழுமலையானை பயன்படுத்திக் கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் உண்மை தெரிய வேண்டுமென்றால் சி.பி.ஐ அல்லது சுப்ரீம் கோர்ட்டில் உள்ள நீதிபதியை வைத்து விசாரணை நடத்த வேண்டும். அறங்காவலர் குழு எந்த தவறும் செய்யவில்லை. லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெயும், மாட்டு, பன்றிக் கொழுப்பும் கலந்ததாக தேவஸ்தான செயல் அதிகாரியை கூற வைத்துள்ளனர். சந்திரபாபுவுக்கு மூளையில் வன்மம் நிறைந்துள்ளது. சமூக வலைதளத்தில் லட்டு பிரசாதம் குறித்து தவறான பிரச்சாரத்தை பரப்பினார்கள்.