திருக்கோவிலூர்: மதுபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் பலியானதை அடுத்து பாஜக முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். குச்சிப்பாளையத்தில் இயங்கிவரும் மதுபோதை சிகிச்சை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற ராஜசேகர் என்பவர் உயிரிழந்தார். ராஜசேகர் உடலில் காயங்கள் உள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த ராஜசேகர் நேற்று முன்தினம் காலை மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனால் மறுவாழ்வு, மனநல மருத்துவமனை நிறுவனரும், கள்ளக்குறிச்சி முன்னாள் பாஜக மாவட்ட துணைத் தலைவர் காமராஜ் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து சிகிச்சை பெற்று வந்த ராஜசேகர் அடித்துக் கொல்லப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.