திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை என்பதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம் மற்றும் அரசு மேல் நிலைப்பள்ளி அருகே இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.