அந்த வகையில், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், மாத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் மாத்தூர் பள்ளி வழிகாட்டி ஆசிரியரான மாநில நல்லாசிரியர் யுவராணி தலைமையில், கலை திருவிழா போட்டிகளில் பங்கேற்றனர். அதன்படி, தெருக்கூத்து நாடகத்தில் 10 மாணவ, மாணவிகளும், வில்லுப்பாட்டில் 5 மாணவ, மாணவிகளும், வீதி நாடகத்தில் 10 மாணவ, மாணவிகளும், பொம்மலாட்டம் தனிநபர் போட்டியில் ஒரு மாணவரும் பங்கேற்றனர். இதில், தெருக்கூத்து நாடகம் மற்றும் வில்லுப்பாட்டிலும் மாநில அளவில், மாத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்கள், வழிகாட்டி ஆசிரியர் யுவராணி, பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், ஊர் பொதுமக்கள், பெற்றோர் வாழ்த்து தெரிவித்தனர்.