அப்போது, நெரும்பூர் குறுவட்டத்திற்கு உட்பட்ட நெரும்பூர், பட்டரை கழனி, நல்லாத்தூர், பொம்மராஜபுரம், பனங்காட்டுசேரி, அட்டவட்டம், இரும்புலிசேரி, வீராபுரம், சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாற்றம், பட்டா திருத்தம், இலவச வீட்டுமனை பட்டா, மின் இணைப்பு, முதியோர் உதவித்தொகை என தங்களின் பல்வேறு தேவைகள் குறித்த மனுக்களை ஜமாபந்தியில் வழங்கினர். ஜமாபந்தியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி பொதுமக்களுக்கு வீட்டு மனை பட்டா, இயற்கை மரணமடைந்த குடும்பத்தினருக்கு காசோலை, விபத்து நிவாரண நிதி, குடும்ப அட்டை ஆகியவற்றை வழங்கி பேசினார். இதில், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் செல்வகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.