இப்பள்ளியில் பயின்ற ஒருவர் எம்பியாகவும், 4 பேர் எம்எல்ஏவாகவும் இருந்துள்ளனர். இப் பள்ளியின் 75ம் ஆண்டு பவள விழா நேற்று மாலை பள்ளி தலைமையாசிரியர் குணசேகரன் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ தமிழ்மணி, திருக்கழுக்குன்றம் ஒன்றிய சேர்மன் ஆர்.டி.அரசு, பேரூராட்சி மன்ற தலைவர் ஜி.டி.யுவராஜ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள், நிலம் வழங்கியவர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்களை பாராட்டி கவுரவித்து கேடயம் ற்றும் பரிசுகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். திருக்கழுக்குன்றம் வியாபாரிகள் சங்கம் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் துணை சேர்மன் பச்சையப்பன், மாவட்ட கவுன்சிலர் ரமேஷ், பேரூராட்சி துணை தலைவர் அருள்மணி, பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் ரவி, பெற்றோர்-ஆசிரியர் குழு இணை செயலாளர் சுகுமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.