சென்னையில் இருந்து வந்த கருப்பையா, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தந்தையை நேற்று காலை சென்று பார்த்தார். அப்போது, அங்கு வந்த பாலமுருகன், சொத்து பிரச்னை தொடர்பாக வாக்குவாதம் செய்தார். திடீரென வாக்குவாதம் முற்றி, பாலமுருகன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கருப்பையாவையும், அவரது தந்தையையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். திருச்சுழி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப்பின் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே கருப்பையா இறந்தார். கணேசன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் பாலமுருகனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.