அப்போது அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் சிறுத்தையை கண்டு அச்சமடைந்தனர். சிறிது நேரம் நடமாடிய சிறுத்தை சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றது. அப்போது வாகன ஓட்டிகள் தங்களது செல்போன்களில் சிறுத்தை நடமாட்டத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். திம்பம் மலைப்பாதை சாலையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.