காந்தி திரைப்படத்தை பார்த்த பின்னர்தான் காந்தியை பற்றி அனைவருக்கும் தெரிய வந்தது என மோடி கூறியிருக்கிறார். நல்ல வேளையாக அவரது தாயைப் பற்றியும், குடும்பத்தை பற்றியும் அவர் மறக்காமல் இருந்தால் சரி. தமிழர்களை திருடர்கள் என கூறிவிட்டு இப்போது மீண்டும் தமிழ்நாட்டுக்கே வந்திருந்தாலும், அடுத்த முறை மோடி தமிழ்நாட்டுக்கு வந்தால் தாங்கள் யார் என தமிழர்கள் காட்டுவார்கள். ஜெயலலிதா குறித்து இப்போது சிலர் கூறுவதெல்லாம், அவர்களது அறியாமையையும், அரசியல் வரலாறு அவர்களுக்கு தெரியாது என்பதையுமே காட்டுகிறது. அதிமுக ஆட்சியில், அதானியிடம் இருந்து மட்டமான நிலக்கரியை வாங்கி ரூ.6,000 கோடி ஊழல் நடந்துள்ளது. அதுகுறித்து மோடியோ, அண்ணாமலையோ பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.