தியாகதுருகம் அருகே 12 ஏடிஎம் கார்டு, ₹10 ஆயிரம் பணத்துடன் கீழே கிடந்த பையை போலீசில் ஒப்படைத்த முதியவர்

*போலீசார் பாராட்டு

தியாகதுருகம் : கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த பிரதிவிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன் (62). இவர் அண்ணாநகர் வழியாக தியாகதுருகத்துக்கு வந்துள்ளார். அப்போது அண்ணாநகர் பேருந்து நிறுத்தம் அருகே ஒரு பணப்பை கீழே கிடந்துள்ளது. இதனை கண்ட வீரப்பன் அதை எடுத்து சென்று தியாகதுருகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அந்த பணப்பையில் சோதனை செய்த போலீசார், அதிலிருந்த 10க்கும் மேற்பட்ட ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை கைப்பற்றினர்.

பின்னர் போலீசார், பணப்பை கீழே கிடந்த அண்ணா நகர் பகுதியில் விசாரித்தனர். அப்போது கர்ஷா தக்கா பகுதியை சேர்ந்த ஷேக் ஜின்னா மகன் ஷேக் முகமது (33) என்பவரின் பணப்பை நேற்று தொலைந்து போனது தெரியவந்தது. பின்னர் ஷேக் முகமதுவை தொடர்பு கொண்ட போலீசார், அவரை தியாகதுருகம் காவல் நிலையத்துக்கு வரவழைத்து அந்த முதியவர் முன்னிலையில் பணப்பை ஒப்படைக்கப்பட்டது. பணப்பையை நேர்மையாக கொண்டு வந்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த முதியவருக்கு போலீசார் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தியாகதுருகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சாமிநாதன், காவலர் சிவா மற்றும் தனிப்பிரிவு போலீசார் ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related posts

மத்தியப்பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!!

சென்னையில் பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைப்பு..!!

சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!