பின்னர் அதனை சுற்றி இருந்த வலைப்பின்னல்களை அறுத்து, ஆமையை விடுவித்து பத்திரமாக கடலுக்குள் விட்டனர். வீரர்களின் இந்த செயல், ஒன்றிய அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒலிவியா என்ற நடவடிக்கைக்கு சான்றாக திகழ்கிறது. ஒலிவியா நடவடிக்கை என்பது கடல் ஆமைகளையும் அவற்றின் இனப்பெருக்க தலங்களையும் பாதுகாக்கும் நடவடிக்கையாகும். இந்திய கடலோர காவல்படை, நாட்டின் கடற்பகுதி, கடல் வளங்கள், மீனவர்கள் ஆகியோரை பாதுகாப்பதுடன், கடல் வாழ் உயிரினங்களையும் அச்சுறுத்தலில் இருந்து மீட்டல், கடல் மாசுபடுதலை தடுத்தல், மாசு ஏற்பட்டால் அதனை அகற்றுதல் போன்ற பணிகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.