டெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி மீதான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி வளர்மதி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்ததை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது.