திருப்பூர்: திருப்பூர் அடுத்த தென்னம்பாளையத்தில் உழவர் சந்தை மற்றும் தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் காய்கறிகளைக் கொண்டு வந்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக காய்கறிகளின் விளைச்சல் மற்றும் அறுவடையில் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் மார்க்கெட்டிற்கு கடந்த சில நாட்களாக காய்கறிகளின் வரத்து குறைவாக இருந்தது. தற்போது காய்கறி வரத்து சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று சந்தைக்கு சுரைக்காய் வரத்து அதிகமாக இருந்தது. இதனால், 15 கிலோ எடை கொண்ட சுரைக்காய் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று விலை குறைந்து ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் புடலங்காய், பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து அதிகமாக இருந்தது.