தேனி அருகே கிணற்றில் குதித்து காதல் ஜோடி தற்கொலை முயற்சி: உயிரிழந்த காதலன்: உயிர் தப்பிய காதலி

தேனி: தேனி அல்லிநகரம் பகுதியில் கிணற்றில் குதித்து காதல் ஜோடி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதில் இளைஞர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். கிணற்றில் உள்ள மரக்கிளையில் சிக்கி, சிறுமி உயிர் தப்பினார். அஜய் குமார் என்ற 21 வயது இளைஞர் அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி இருவரும் காதலித்து வந்தனர். உறவினர்கள் என்றாலும் சகோதர – சகோதரி உறவு முறை என்பதால் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு வர இம்முடிவை எடுத்துள்ளனர்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது