அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தேனி தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்ய வந்தேன். திருச்சி, திருநெல்வேலி, சேலம், கோவை, தேனி ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிட உள்ளோம். எனது அம்மா ஜெயலலிதாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக இந்த தேர்தலில் போட்டியிட உள்ளேன். தற்போது வரைக்கும் எங்களது கட்சியை மாநில கட்சியாக பதிவு செய்துள்ளோம். இவ்வாறு பேசினார்.