இதனிடையே, கடந்த ஓராண்டாக மருத்துவமனையில் நடந்த பணிகள் குறித்த வரவு-செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டபோது, பல்வேறு முறைகேடு தெரிய வந்துள்ளது. குறிப்பாக தேசிய தரச்சான்று பெற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு ஒதுக்கிய நிதியில் முறைகேடு நடந்துள்ளதாகவும், பொய்யான கணக்குகள் காட்டப்பட்டதாகவும், 20 சதவீத பணிகள் கூட நடைபெறவில்லை எனவும் கூறப்படுகிறது. இது குறித்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம், தமிழக மருத்துவக்கல்வி இயக்குநரகத்திற்கு புகார் தெரிவித்துள்ளது. இதையடுத்து அதிகாரிகள் குழுவினர், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.