தேனி: தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சியில் அதிமுக அலுவலகத்தை அமமுக கட்சியினர் கைப்பற்றியதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக அலுவலகத்தில் அதிமுக, அமமுக இரு தரப்பினரும் கூட்டங்களை நடத்துவோம் எனக் கூறியதால் யாரும் செல்லக் கூடாது என காவல்துறை தடை விதித்தது. இந்நிலையில் 3 ஆண்டுகளாக கூட்டம் ஏதும் நடத்தப்படாமல் இருந்த அலுவலகக் கட்டடத்தில் இன்று அமமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் ஒரு மணி நேரம் நடந்தது. சசிகலா கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்பட்ட கட்டடத்தில் அமமுக கூட்டம் நடத்தப்பட்டதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.