தேனி: தேனி மாவட்டம் சுருளி அருவி சாலையில் முகாமிட்டிருந்த யானைகள் இடம் பெயர்ந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக சுருளி அருவிக்கு செல்லும் வனச்சாலையில் குட்டிகளுடன் யானைகள் முகாமிட்டு உலா வந்தது. சாலையில் யானைகள் நடமாட்டம் காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்திருந்தது.