இந்நிலையில், சிலையை கரைத்துவிட்டு அனைவரும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது லட்சுமிநாயக்கன்பட்டி சிந்தலைசேரி சாலையில் டிராக்டர் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிராக்டரில் இருந்த தமிழன் மகன் நிவாஷ் (12), பிரபு மகன் கவிகிஷோர் (12) மற்றும் உத்தமபாளையம் பிடிஆர் காலனியைச் சேர்ந்த ஆறுமுகன் மகன் விஷால் (13) ஆகிய 3 சிறுவர்கள் டிராக்டரில் சிக்கி பரிதாபமாக பலியாகினர். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.