திருட்டு வழக்கு: 7 நாளில் 39 குற்றவாளிகள் கைது

சென்னை: சென்னையில் கடந்த 7 நாட்களில் திருட்டு தொடர்பான 32 வழக்குகளில் தொடர்புடைய 39 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். 65 கிராம் தங்க நகைகள், 80 கிராம் வெள்ளிப் பொருட்கள், 7 செல்போன்கள், ரூ.72.71 லட்சம், 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி .1 முதல் ஜூன் 19 வரை திருட்டு வழக்குகளில் கைதான 118 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக  தகவல் தெரிவித்தார் .

 

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு