ேவலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த இலவம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றும் தீபலட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டுப்பாடங்கள் சரியாக எழுதாமல் வந்த 7ம் வகுப்பு மாணவ, மாணவிகளை மரக்கட்டை ஸ்கேலால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் கம்மவார்பாளையத்தை சேர்ந்த 4 மாணவிகளின் தோள்பட்டை, மணிக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்காயங்கள் ஏற்பட்டு அந்த பகுதி வீக்கம் அடைந்தது. இதுகுறித்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி விசாரணை நடத்தி ஆசிரியை தீபலட்சுமியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு உள்ளார்.