பின்னர், பஸ் புறப்படும்போது அவர்கள் ஓடி வந்து ஏறி ஆபத்தான முறையில் படியில் நின்றபடி பயணம் செய்தனர். இதனை கவனித்த டிரைவர் மற்றும் கண்டக்டர் பஸ்சை நிறுத்தி விட்டு மாணவர்களிடம் உள்ளே ஏறும்படி கூறினர். ஆனால், மாணவர்கள் ‘நாங்கள் நிக்குற பஸ்சில எல்லாம் ஏற மாட்டோம், ஓடுற பஸ்சிலதான் ஏறுவோம்’ என்று கூறி அட்டகாசம் செய்தனர். இதனால், 1 மணி நேரம் வரை பஸ்சை எடுக்காமல் நடுவழியிலேயே நிறுத்தி இருந்ததால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கொடுத்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபின் மாணவர்கள் பஸ்சில் ஏறி இருக்கையில் அமர்ந்தனர். அதன் பின்னர் தான்பஸ் இயக்கப்பட்டது.