Tuesday, September 17, 2024
Home » சுனிதா வில்லியம்ஸ் இல்லாமல் பூமியில் தரையிறங்கியது ஸ்டார்லைனர் விண்கலம்

சுனிதா வில்லியம்ஸ் இல்லாமல் பூமியில் தரையிறங்கியது ஸ்டார்லைனர் விண்கலம்

by Neethimaan

நியூ மெக்சிகோ: சுனிதா வில்லியம்ஸ் உட்பட 2 விண்வெளி ஆய்வாளர்கள் இல்லாமல், வெறுமனே ஸ்டார்லைனர் விண்கலம் மட்டும் பூமியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. பூமியில் இருந்து சுமார் 420 கிமீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அடிக்கவி விண்வெளி ஆய்வாளர்கள் சென்று ஆய்வு செய்து விட்டு திரும்புவது வழக்கம். இப்பணிகளை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா கவனித்து வருகிறது. இவ்வாறு விண்வெளிக்கு வீரர்களை அழைத்துச் சென்று பத்திரமாக திரும்ப அழைத்து வரும் பணியில் தனியாரை ஈடுபடுத்த நாசா முடிவு செய்தது. அதன்படி, முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கும் பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்கிற்கும் அனுமதி வழங்கப்பட்டது. இதில் ஸ்பேஸ்எக்ஸ் தனது சோதனைகளை முடித்து, வீரர்களை விண்வெளிக்கு வெற்றிகரமாக வீரர்களை அழைத்துச் சென்று வருகிறது.

ஆனால் போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம் பலகட்ட சிக்கல்களை சந்தித்தது. சோதனையிலும் நிறைய தடுமாற்றங்கள் வந்ததால் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி சோதனை செய்யும் இறுதி கட்டத்தை எட்ட தாதமதமானது. ஒருவழியாக கடந்த ஜூன் 7ம் தேதி இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய 2 வீரர்களுடன் ஸ்டார்லைனர் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்தது. அடுத்த 8 நாளில் சுனிதா உட்பட 2 வீரர்களும் ஸ்டார்லைனர் மூலம் பூமிக்கு திரும்ப வேண்டிய நிலையில், விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு போன்ற தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டன. இதனால், வெறும் விண்கலத்தை பூமிக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டது.

அதன்படி நேற்று முன்தினம் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து வீரர்கள் இன்றி புறப்பட்ட ஸ்டார்லைனர் 6 மணி நேரம் பயணித்து நியூ மெக்சிகோவின் ஒயிட் சாண்ட் பகுதியில் பாராசூட் மூலம் பத்திரமாக தரையிறங்கியது. இதில் விண்கலம் முழுக்க முழுக்க தானியங்கி கட்டுப்பாட்டில் தரையிறங்கி உள்ளது. சில குறைபாடுகள் இருந்தாலும் ஸ்டார்லைனர் வெற்றிகரமாக பயணத்தை நிறைவு செய்ததாக நாசா கூறி உள்ளது. விண்வெளி மையத்தில் சிக்கி உள்ள சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் மூலம் திரும்ப நாசா ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அனுப்பப்படும் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் மூலம் மட்டுமே இருவரும் பூமிக்கு திரும்ப முடியும். இதனால் சுனிதா வில்லியம்சின் 8 நாள் விண்வெளி பயணம் 8 மாதமாக நீடித்துள்ளது.

You may also like

Leave a Comment

5 + 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi