‘பப்ஜி’ மூலம் ஏற்பட்ட விபரீத காதல் காதலனை தேடி குழந்தைகளுடன் ஊடுருவிய பாக். காதலி கைது: உத்தரப் பிரதேச போலீஸ் அதிரடி

நொய்டா: காதலனை தேடி இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் காதலி, அவரது 4 குழந்தைகள் உள்பட 6 பேரை உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்தனர். உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் ஆன்லைனில் ‘பப்ஜி’ விளையாடும் போது பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா என்ற திருமணமான பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இது நாளடைவில் காதலானது. இதைத் தொடர்ந்து, அப்பெண், தனது நான்கு குழந்தைகளுடன் நேபாளம் வழியாக இந்தியாவுக்கு வந்தார். அங்கிருந்து பேருந்து மூலம் கிரேட்டர் நொய்டா வந்தார். அங்கு காதலர் சச்சின் வாடகைக்கு எடுத்த வீட்டில் அவர்கள் ஒன்றரை மாதமாக வசித்து வந்தனர்.

அப்பகுதியில் உள்ளவர்களுக்கு சீமா, பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், பாகிஸ்தான் காதலி, அவரது 4 குழந்தைகள், வாடகைக்கு வீடு கொடுத்தவர் ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் டிசிபி சாத் மியா கான் கூறுகையில், ‘பாகிஸ்தான் பெண் உள்பட கைதானவர்கள் போலீஸ் காவலில் உள்ளனர். தற்போது அப்பெண்ணிடமும், வீடு வாடகைக்கு கொடுத்தவரிடமும் விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிந்த பிறகு, மீதி விவரங்கள் தெரிவிக்கப்படும்,’’ என்று கூறினார்.

Related posts

மேக் -இன்-இந்தியா, 3வது பெரிய பொருளாதாரம், விஸ்வகுரு என பேசினால் மட்டும் போதாது : பிரதமர் மோடியை விமர்சித்த நிதின் கட்கரி

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு