இரும்பு கம்பி திருடியவர் கைது

திருவொற்றியூர்: கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரிஸ்வான் சாலையில் கார்ப்பரேஷன் வேலைக்காக சாலையின் ஓரம் இரும்பு கம்பிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.நேற்று காலை கொடுங்கையூர் காவலர்கள் சதீஷ் மற்றும் ஐயப்ப ராஜ் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் அங்கு வந்த ஒரு ஆட்டோவை மடக்கி சோதனை செய்தபோது அதில் இரும்பு கம்பிகள் இருந்தன.

போலீசார் ஆட்டோவில் இருந்த நபரிடம் விசாரணை செய்த போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். இதனை அடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். அதில் அவர் மாதவரம் அம்பேத்கர் நகர் நாகாத்தம்மன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த நரேஷ்(32) என்பதும், இவர் கொடுங்கையூர் ரிஸ்வான் சாலையில் கார்ப்ரேஷன் வேலைக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை திருடியதும் தெரிய வந்தது. இதனை யடுத்து நரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை