மத்திய சென்னை மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி புகார்


பெரம்பூர்: மத்திய சென்னை மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார் கொடுத்துள்ளனர். சென்னை புளியந்தோப்பு சிவராஜபுரம் 5வது தெருவை சேர்ந்தவர் மணி (46). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் 77வது வட்ட செயலாளராக உள்ளார். இவர் நேற்றிரவு பேசின்பிரிட்ஜ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது; நாம் தமிழர் கட்சி மத்திய சென்னை மாவட்ட செயலாளராக உள்ள அய்யனார் என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை பற்றி அவதூறாக பேசி வருகிறார்.

அவர் தனியார் யூ டியூப் சேனலில் பேசும்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் குறித்துஅவதூறான கருத்துக்களை பேசியுள்ளார். எனவே, அய்யனார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு