பேய் உத்தரவிட்டதாக கூறி மனைவியை கொன்று மூளையை தின்ற கணவர்: மெக்சிகோவில் கொடூரம்

பியூப்லோ: பேய் சொன்னதால் மனைவியை கொன்று மூளையை சாப்பிட்டதாக கணவர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மெக்சிகோவை சேர்ந்தவர் அல்வாரோ (32). கட்டிட நிபுணர். இவரது மனைவி மரியா மான்செராட் (39). இந்த ஜோடி ஒரு வருடத்திற்கு முன் தான் திருமணம் செய்து கொண்டனர். மரியா மான்செராட்டுக்கு முந்தைய திருமணத்தின் மூலம் 5 மகள்கள் உள்ளனர். அல்வாரோ சாத்தானை வழிபாடு செய்யும் குழுவை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அல்வாரோ மனைவியை கடந்த ஜூன் 29ம் தேதி கத்தி, உளி மற்றும் சுத்தியலால் கொலை செய்து உள்ளார்.

பின்னர் உடல் உறுப்புகளை வெட்டி பிளாஸ்டிக் பைகளில் போட்டு விட்டு 2 நாட்களுக்கு பின்னர், மரியாவின் மகள்களிடம் அவரது தாயாரின் உடலை எடுத்துச்செல்லும்படி கூறியுள்ளார். மரியாவின் தாய் அலிசியா மாண்டியேல் செரான் புகாரில் போலீஸ் விசாரித்த போது, ‘சாத்தானின் தொடர்ச்சியான வேண்டுகோளின் காரணமாக அவர் இந்த கொடூரமான கொலையை செய்ததாகவும், மனைவியின் மூளையை தின்று மண்டை ஓட்டை எரித்து சாம்பலாக்கியதாகவும் கூறி உள்ளார். அவரது வீட்டில் ஒரு மந்திர பீடத்தையும் போலீசார் கண்டுபிடித்துஉள்ளனர்.

Related posts

நீட் தொடர்பான தவெக தலைவர் விஜய் கருத்தை காங்கிரஸ் வரவேற்கிறது: செல்வப்பெருந்தகை

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம்!!

என்றும் எப்போதும் தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் : தமிழ்நாடு அரசு புகழாரம்