சிறுமிக்கு பாலியல் தொல்லை

திருத்தணி: திருத்தணி அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை மகளிர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருத்தணி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 11 வயது சிறுமி. நேற்று முன்தினம் இரவு இயற்கை உபாதைக்காக சிறுமி சென்றுள்ளார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன்(36) என்பவர் சிறுமியை வழிமறித்து அத்துமீறலில் ஈடுபட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதில் கதறி அழுதுகொண்டே வீட்டுக்கு வந்த சிறுமி, தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறினார். இதனையடுத்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், திருத்தணி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சீனிவாசனை தேடி வருகின்றனர்.

Related posts

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகிறார்!

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3096 கனஅடியாக உயர்வு!

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இலங்கை கடற்படையால் கைது!