சென்னை: பிராட்வேயில் இருந்து கோவளம் செல்லும் அரசு பேருந்தில் நடத்துனர் பூவலிங்கம் (54) மயங்கி விழுந்து உயிரிழந்தார். சென்னை பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து குறளகம் அருகே சென்றபோது பூவலிங்கம் மயங்கி விழுந்துள்ளார். ஓட்டுநர் ஜஸ்டின் சேவியர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.