Wednesday, June 26, 2024
Home » கீழே கிடந்த மணிபர்சை ஒப்படைத்த சிறுவன்: போலீசார் பாராட்டு

கீழே கிடந்த மணிபர்சை ஒப்படைத்த சிறுவன்: போலீசார் பாராட்டு

by Ranjith

பெரம்பூர்: வியாசர்பாடி புதுநகர் 8வது தெருவைச் சேர்ந்தவர் ஷக்கீரியா. இவரது மகன் முகமது பைசல். 14 வயதான சிறுவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் காலை முகமது பைசல் பள்ளிக்குச் சென்றபோது, வழியில் கீழே மணி பர்ஸ் ஒன்று கிடந்துள்ளது. அதை எடுத்துப் பார்த்தபோது சுமார் 300 ரூபாய் பணம், ஏடிஎம் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட பல ஆவணங்கள் இருந்துள்ளன.

அதை முகமது பைசல், எம்கேபி நகர் காவல் நிலையம் சென்ற போலீசார் சரிபார்த்தபோது அதில் கடலூர் முகவரி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கடலூர் பகுதியில் உள்ள போலீசாருக்கு தகவல் சொல்லி இதுகுறித்து விசாரிக்க கூறியுள்ளனர். சம்பந்தப்பட்டவர் வரும் பட்சத்தில் அவரிடம் மணி பர்சை ஒப்படைக்க உள்ளனர். எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் உள்ளிட்ட போலீசார் சிறுவன் முகமது பைசலின் நேர்மையைப் பாராட்டி அவனுக்கு வெகுமதி அளித்தனர்.

You may also like

Leave a Comment

one + 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi