செய்யாறு: செய்யாறு அருகே சிறுமி உயிரிழந்ததற்கு குளிர்பானம் அருந்தியது காரணமல்ல என்று அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனிக்கிலுப்பை கிராமத்தில் ராஜ்குமார் என்பவரது மகள் காவ்யா(5) குளிர்பானம் அருந்தியதால் உயிரிழந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. குளிர்பானம் அருந்தியதால் சிறுமி இறக்கவில்லை என சென்னையில் உள்ள தேசிய உணவு ஆய்வகம் அறிவித்துள்ளது.