திருவிக நகர் தொகுதி மக்களை ஒரே தாலுகாவில் சேர்க்க வேண்டும்: தாயகம்கவி எம்எல்ஏ வலியுறுத்தல்


சென்னை: பேரவையில் உயர், பள்ளிக்கல்வி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானியக்கோரிக்கையின் போது, திருவிக நகர் எம்எல்ஏ ப.தாயகம்கவி (திமுக) பேசியதாவது: திருவிக நகர் தொகுதியில் அரசு கலை கல்லூரி அமைத்து தரவேண்டும். திருவிக நகர் தொகுதி மக்கள் பெரம்பூர், புரசைவாக்கம், அயனாவரம் என்று 3 தாலுகாவுக்கு பிரிந்து செல்லும் நிலை உள்ளது. இதனால், கால விரயம், அலைச்சலால் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, இப்பிரச்னைக்கு தீர்வாக, இந்த தொகுதி மக்கள் அனைவரும் ஒரே தாலுகாவை பயன்படுத்த வழிவகை செய்து தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு