தவெக மாநாடு தொண்டர்களுக்கு விஜய் திடீர் கட்டுப்பாடு

சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை விஜய் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுற்றறிக்கை மூலம் அவர் கூறியிருப்பதாவது:

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு வரும் கட்சித் தோழர்கள் மது அருந்திவிட்டு வரக்கூடாது. பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு செய்யக்கூடாது. அதிகாரிகளிடம், பெண் காவலர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் சாகசங்களில் ஈடுபடக் கூடாது. கிணறு மற்றும் ஆபத்தான பகுதிகளில் இருந்தால் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

மருத்துவ குழு மற்றும் தீயணைப்பு துறையினருக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். பேருந்து மற்றும் வேன்களில் தகுந்த எண்ணிக்கையில் மட்டுமே தொண்டர்களை அழைத்து வர வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் எந்த காரியத்திலும் ஈடுபடக் கூடாது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி மக்களுக்கு சிரமத்தை தரக்கூடாது. இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related posts

பிக்-அப் பாயிண்ட் திடீர் மாற்றம், இருசக்கர வாகனங்கள் நுழைய தடை: அல்லல்படும் சென்னை விமான நிலைய பயணிகள்

ரேஸ் கிளப் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி மனு: சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு

அண்ணா பிறந்த மண்ணில் பவள விழாவை கொள்கை கூட்டணியுடன் கொண்டாடுவோம்: தொண்டர்களுக்கு முதல்வர் கடிதம்