தஞ்சை: தஞ்சையில் டிஐஜி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினர் 30 பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற வந்த மாணவர்கள் ஆளுநருக்கு எதிராக கருப்பு சட்டை அணிந்து வந்தனர். திங்கள்கிழமை பட்டமளிப்பு விழா நடந்து முடிந்த பிறகு அறையில் தங்க வைக்கப்பட்டிருந்த மாணவரை போலீசார் விடுவித்தனர். மாணவரை சிறை வைத்ததை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் டிஐஜி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.