அப்போது எதிரே வந்த கார் இவரது காரை வழி மறித்து நின்றது. காரில் இருந்தவர்கள் சத்தமாக ஹாரனை தொடர்ந்து எழுப்பினர். காரில் இருந்து கீழே இறங்கி வந்த பாபு, எதற்காக காரை வழிமறித்தீர்கள் என கேட்டார். உடனே 2 பேர் அரிவாளுடன் இறங்கிவந்து மகன் கண்முன் பாபுவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பாபு உயிரிழந்தார். இதுபற்றி போலீசார் கூறுகையில், தொழில் போட்டி காரணமாக தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக திருவாரூர் மாவட்டம், வைப்பூர் காவல் நிலையத்தில் பாபு ஏற்கனவே புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக 2 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.